The TAMIL NADU CONTINGENCY FUND ACT, 1954
Tamil Nadu · state statute
Open in Lexace · Ask the AI about this actமெட்ராஸ் சட்டமன்றத்தின் பின்வரும் சட்டமானது 1954 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் முதலில் 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 3 ஆம் நாளன்று புணித ஜார்ஜ் கோட்டை அரசிதழில் பொது தகவலுக்காக வெளியிடப்பட்டது:- தமிழ்நாடு சட்டம் ॥ 4954. 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம். 1950 ஆம் ஆண்டு மெட்ராஸ் எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தை மீண்டும் இயற்றுவதற்கானதொரு சட்டம். ஆந்திர மாநிலம் உருவானதன் விளைவாகவும், மைஞூர் மாநிலத்தின் பரப்பளவு அதிகரித்ததன் விளைவாகவும், 1950 ஆம் ஆண்டு மெட்ராஸ் எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தை (மதராஸ் சட்டம் XIV/1950) சில மாற்றங்களுடன், மீண்டும் இயற்றுவது உகந்தது என்பதால்; இது பின்வருமாறு இயற்றப்படுகிறது:- 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்.- (1) இச்சட்டம், 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம் என வழங்கப்பெறும். (2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும். (3) இது, உடனடியாக நடைமுறைக்கு வரும். 2. எதிர்பாராச் செலவு நிதியம் ஒன்றை நிறுவுதல்.- (1) தமிழ்நாடு மாநிலத் தொகுநிதியத்திலிருந்து மாற்றப்பட்ட நூற்றைம்பது கோடி ரூபாயைக் கொண்டதும், "தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்பாராச் செலவு நிதியம்" என்றழைக்கப்படும் முன்பணத்தின் தன்மையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென எதிர்பாராச் செலவு நிதியம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும். வரம்புரையாக, 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 10 ஆம் நாளன்று தொடங்கி 1993 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் நாளுடன் முடிவடையும் காலஅளவின்போது, இந்த உட்பிரிவானது, "எழுபத்தைந்து கோடி ரூபாய்" என்ற சொற்களுக்காக "நூற்றைம்பது கோடி ரூபாய் எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்பட்டுள்ளன என்ற மாற்றத்திற்கு உட்பட்டு, செல்திறம் பெறுதல் வேண்டும். (2) அத்தகைய எதிர்பாராச் செலவு நிதியமானது தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்பில் இருக்கும்; மேலும், அரசமைப்பின் 205 ஆம் உறுப்பின்படி அல்லது 206 ஆம் உறுப்பின்படி மாநிலச் சட்டமன்றத்தின் சட்டத்தினால், அத்தகைய செலவினங்களுக்கு அதிகாரமளிக்கும் வரையில், எதிர்பாராச் செலவினங்கள் எதனையும் சமாளிப்பதற்காக அதிலிருந்து முன்பணங்கள் அளிப்பதற்கு ஆளுநர் அதிகாரம் உடையவர் ஆவார். (3) மேற்கூறப்பட்டவாறான அத்தகைய செலவினம் எதனும், சட்டத்தினால் அதிகாரமளிக்கப்படும் போதெல்லாம், செலவினங்களைச் சமாளிப்பதற்காக அத்தகைய நிதியிலிருந்து பெறப்பட்ட முன்பணத்திற்குச் சமமான தொகையை மாநில அரசு, எதிர்பாராச் செலவு நிதியத்திற்கு ஈடுசெய்தல் வேண்டும். 3. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.- மாநில அரசு, புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழில் அறிவிக்கை செய்வதன் மூலம், இச்சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்தும் நோக்கத்திற்காக விதிகளைச் செய்யலாம். 4. நீக்கறவு.-- 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 301950), ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது மற்றும், கூறப்பட்ட சட்டத்தினால் நிறுவப்பட்ட நிதியத்தில் எஞ்சியிருப்பது, இதன்மூலம் சென்னை மாநிலத்தின் எதிர்பாராச் செலவு நிதியத்திற்கு மாற்றப்படுகிறது.
Lex